tamilnadu

img

தேசிய குழந்தைகள் புத்தக திருவிழா துவங்கியது

கடலூர், அக்.14- ஒரு லட்சம் புத்தகங் கள், ஒருலட்சம் குழந்தை  கள் என்ற முழக்கத்துடன் கடலூரில் தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா துவங்கியது.  அக்டோபர் 14 முதல் 21 வரை கடலூர் நகர அரங்கில் நடைபெறும் 3 வது தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் வே.அன்புச் செல்வன் துவக்கி வைத்தார். பின்னர், புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து  எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான பாரதிகிருஷ்ணகுமார் மாணவர்களுடன் உரையாடினார்.

மாணவர்களுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதுதல், ரங்கோலி கோலம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் பங்கேற்கும் புத்தக விமர்சனம், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஜி.ரங்கராஜன், ஜே.ஹவுஸ்,ஆயிஷா நடராஜன், என்.ஜனார்த்தனன், கவிஞர் பால்கி, எம்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புத்தக திருவிழாவைத் தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.